×

நாளை மனு வழங்க அழைப்பு

 

கோவை, ஆக.4: கோவை மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு கிராமம் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில், வரும் 12ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து நாளை காலை 11 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) தலைமையில் வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார்கள்.

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி, வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்கலாம். இது தவிர வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு), மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மற்றும் மருதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் மனு கொடுக்கலாம். மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து வரும் 12ம் தேதி முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

 

Tags : Coimbatore ,Bhadrakaliamman temple ,Velliangadu village ,Mettupalayam, Coimbatore ,
× RELATED மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 855 பேர் மீது வழக்கு