- சீமன்
- விபூட்டி
- கார்த்தி சிதம்பரம் கலை
- காரைக்குடி
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- சிவகங்கை
- கார்த்தி சிதம்பரம் எம்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பேசியதாவது: இங்கு சீமான் வேட்பாளராக நிற்கிறார். தேர்தலின் போது வருவார். பின்னர் காணாமல் போய் விடுவார். கடந்த தேர்தலின் போது சீமான் திருவெற்றியூரில் நின்றார்.
அங்கு தோற்ற பின்னர் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. சீமான் வந்தால் நன்றாக செட்டிநாட்டு சாப்பாடு போட்டு, பிள்ளையார்பட்டிக்கு அனுப்பி விபூதியை போட்டு திருப்பி அனுப்ப வேண்டும். அடுத்ததாக புதிதாக நடிகர் ஒருவர் கட்சி துவங்கியுள்ளார். அவர் கட்சியில் ஒரு வேட்பாளர் நிற்கிறார். டாக்டர் என கூறினர்.
அந்த டாக்டருக்கு முழுநேரமாக ரீல்ஸ் போடுவது தான் வேலை. அவர் பெயர் டாக்டர் ரீல்ஸ் என நான் வைத்துள்ளேன். எப்போது பார்த்தாலும் ரீல்ஸ் தான் போடுவார். ரீல்ஸ் போட்டா லைக் போட வேண்டும். ஓட்டுபோட முடியுமா, ஓட்டு போட முடியாது.
இன்னொருவர் குக்கர் சின்னத்தில் மீண்டும் நிற்கிறார். இரண்டு முறை நின்று தோல்வியடைந்துள்ளார். மூன்றாவது முறையாக நிற்கிறார். நான் அடித்து கூறுகிறேன். இந்த தேர்தலுக்கு பிறகு குக்கர் கட்சி இருக்காது. பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும், அந்த கட்சியை கடித்து, குதறி சாப்பிட்டு விடுவார்கள். அந்த கட்சியை ஸ்வாகா செய்து விடுவார்கள். அடுத்த தேர்தலில் குக்கரே இருக்காது. அது தாமரையாக மாறிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.
