புதுச்சேரி: ‘தமிழ்நாட்டின் சகோதர மாநிலம் புதுச்சேரி. வழக்கமாக தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் ஒரே நேரத்தில் நடக்கும் தேர்தலை இம்முறை மாற்றியுள்ளனர். தேர்தல் தேதியை மாற்றினால் உணர்வை மாற்ற முடியுமா?. என்.ஆர்.காங்.-பாஜக கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார். புகழ்பெற்ற புதுச்சேரியை பாஜகவும் என்.ஆர்.காங்கிரஸும் என்ன நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார்கள்?. புதுச்சேரியின் குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தவர் புதுவை சிவம். அரசியல் மாண்புகளை பாஜக குழிதோண்டி புதைத்து வருகிறது. புதுச்சேரி தனது பாரம்பரிய பெருமைகளை இழந்து கொண்டிருக்கிறது’ என புதுச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
