×

சைதாப்பேட்டையை வளர்ச்சி மிக்க தொகுதியாக தொழில்நகரமாக மாற்றுவதற்கு திட்டங்கள்: திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: சைதாப்பேட்டையை வளர்ச்சிமிக்க தொகுதியாக, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழில்நகரமாக மாற்றுவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார். சைதாபேட்டை தொகுதிக்குட்பட்ட 139வது வட்டத்தில் வீதி, வீதியாக நடந்தேச்சென்று பொதுமக்களிடம் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தீவிர வாக்குச்சேரிகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சைதாப்பேட்டையை வளர்ச்சிமிக்க தொகுதியாக, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழில்நகரமாக மாற்றுவதற்கு சிறப்பான, சீர்மிகுந்த திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
சைதாப்பேட்டை சட்டமன்றத் மண்டலம் 10, வார்டு 139, அண்ணாமலைநகர் 3வது தெருவில் பன்னோக்குக் கட்டிடம் கட்டும் பணிக்கு 2021-22ம் ஆண்டு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.33,03,000 ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவுற்று பன்னோக்குக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வார்டில் 0.25 கி.மீ. நீளத்தில் ரூ.12 லட்சம் செலவில் 2 உட்புறச் சாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.25 லட்சம் செலவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.48 லட்சம் செலவில் இரண்டு பொதுக்கழிப்பிடங்கள், 1.6 கி.மீ. நீளத்தில் 13 உட்புற சாலைகள் ரூ.88 லட்சத்திலும், 1.1. கி. மீ நீளத்தில் 6 மழைநீர் வடிகால் பணிகள் ரூ.6 கோடியே 10 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.28.4 லட்சம் செலவில் கட்டடப் பணிகளும், ரூ.49 லட்சம் செலவில் உடற்பயிற்சிக் கூடம். ரூ.50 லட்சத்தில் உடற்பயிற்சிக் கூடமும், ரூ.83 லட்சம் செலவில் விளையாட்டு மைதானமும், ரூ.56 லட்சம் செலவில் 1.1 கி.மீ. நீளத்திற்கு 10 உட்புறச் சாலைகளும், ரூ.2 கோடியே 10 லட்சம் செலவில் மயானபூமியும், 1.2 கி.மீ. நீளத்திற்கு 9 உட்புறச் சாலைகள் ரூ.89 லட்சம் செலவிலும், 0.85 கி.மீ. 2 மழைநீர் வடிகால்வாய்கள் ரூ.3 கோடியே 55 லட்சம் செலவிலும், ஜாபர்கான்பேட்டை கெனால் ரூ.5 கோடியே 29 லட்சம் செலவிலும், பள்ளிக்கட்டிடங்கள் ரூ.8 கோடி செலவிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தெருவிளக்குகள் மற்றும் மின்கம்பங்கள் ரூ.64 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை போன்ற எண்ணற்றத் திட்டங்களால் அனைத்துத் தரப்பு மக்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் அரசினையும், மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என பாராட்டி, சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க.வின் கோட்டைதான் என்பதை மீண்டும் நிரூபிக்கும் தேர்தலாக, வரலாற்றில் இப்படியொரு வெற்றியை தி.மு.கழகம் பெற்றதில்லை என்பதை தமிழ்நாடு முழுவதும் மெய்பிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வாக்குச் சேகரிப்பு நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, வட்டக் கழக செயலாளர் எஸ்.பி. கோதண்டம். சைதைத் தொகுதி பொறுப்பாளர் சைதை சாதிக் காங்கிரஸ் ஜோதிபொன்னம்பலம், வி.சி.க ம.ஜேக்கப், பாண்டுரங்கன், ம.தி.மு.க. ப.சுப்பிரமணி, தே.மு.தி.க – ஆனந்தன். எஸ்.டி.பி.ஐ. – அபுதாகிர். சி.பி.ஐ – சிவா, ம.ம.க- சாகுல்அமீது, கதிர், ம.நீ.மை – கதிர், ஐ.யூ. எம்.எல். – அப்துல் கலாம் உள்ளிட்ட ஏராளமான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் பங்கேற்றனர்.

Tags : Saidapet ,DMK ,Ma. Subramanian ,Chennai ,139th circle ,
× RELATED சீமானுக்கு விருந்து வைத்து விபூதி...