×

வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் வேட்புமனு தாக்கல்

சென்னை: சென்னை வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரமேலதா, வில்லிவாக்கத்தில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில், “வில்லிவாக்கம் தொகுதி மக்களாகிய உங்களுக்காக உழைத்து இந்த தொகுதியை திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் நிச்சயம் முன்னேற்றுவார். இதை இந்த நேரத்திலே உங்களிடம் நான் பெருமையோடு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

இங்கு கூடியிருக்கும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, மமக, முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழர் தேசம், தேமுதிகவினுடைய என் அன்பான உடன்பிறப்புகளே.. கேப்டனுடைய ஆசீர்வாதத்துடன் எல்லாரும் இங்க நீங்க கார்த்திக்காக கூட்டணி தர்மத்தோடு பணியாற்றி வேண்டும். வில்லிவாக்கம் தொகுதி நமது தொகுதி. அந்த வெற்றி நமது வெற்றி என்பதை வரும் தேர்தலில் நீங்களும் அவர்களோடு இணைந்து நிச்சயம் பணியாற்றி வெற்றியை அவருக்கு உரித்தாக வேண்டும்” என்றார்.

திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் கூறுகையில், ‘தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, என்னை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். மக்களின் பேராதரவுடன் நடைபெற்ற இந்த பிரசார கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றி உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டியபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அளித்த உற்சாகமான வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்தது. மாபெரும் ஆதரவளித்த அயனாவரம் மக்களுக்கும், எனக்காக சிறப்பாக பிரசாரம் செய்த பிரேமலதாவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கேப்டனின் ஆசீர்வாதம் நம்முடைய வெற்றியை மேலும் உறுதிசெய்யும்” என்றார். பிரசாரத்தின் போது பகுதி செயலாளர்கள் கூபி ஜெயன், வாசு மற்றும் தொகுதி பொறுப்பாளர் நாகலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Karthik Mohan ,Dimuka ,Williwakkam ,Chennai ,Chennai Williwakkam ,Kartik Mohan ,Demudika ,General ,Pramalatha ,Wilivakkam ,
× RELATED சமாதானம் பேசினாரு… வேட்பாளரா ஆனாரு…