×

நச்னு நாலு கேள்வி: ஓங்கிச் சொல்கிறோம், அடித்து சொல்கிறோம் எஸ்.பி.வேலுமணிக்கு தோல்வி உறுதி: தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் என்.ஆர்.கார்த்திகேயன்

1. இந்தத் தேர்தல் களம் எப்படி உள்ளது? உங்களுக்கான ஆதரவு எப்படி இருக்கிறது?
இந்த தேர்தல் களம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவதற்கு உறுதியான தேர்தல் களம். தொண்டாமுத்தூர் தொகுதி முற்றிலும் தளபதி அவர்களுடைய ஆட்சியில் செய்த சாதனைகள் அத்தனையும் எல்லா தரப்பு குடும்பங்களிலும் ஏதோ ஒரு நபராவது பயன்பட்டிருக்கிறார்கள். அதுதான் என்னுடைய முதல் வெற்றி.

2. உங்களுக்கு எதிரா அதிமுக சார்புல வலுவான வேட்பாளரான எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். அது எந்த அளவுக்குச் சவாலாக இருக்கும்? அதை எப்படி நீங்க சமாளிக்கப் போறீங்க? அதிமுகவுல வேட்பாளர் போடுறது இயற்கைதான். ஆனாலும் எங்களுடைய கூட்டணி பலமான கூட்டணி. தமிழக முதல்வர் செய்த சாதனைகள் எல்லாமே எங்களுக்குப் பக்கபலமா இருக்கு. அதனால எங்களுடைய வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினுடைய கூட்டணிக் கட்சித் தோழர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவரின் அன்பு உடன்பிறப்புகள் அத்தனை பேரும் உற்ற தோழனாக, உயிர்காப்பாளனாக இருந்து பகலும் இரவும் பாராமல் வேலை செஞ்சிட்டு இருக்கோம். என்னை அறிவித்து எட்டு நாள்தான் ஆகிறது.

எட்டு நாள்ல என்னுடைய தொகுதி முழுவதும் இருக்கிற திமுக நிர்வாகிகள் கொண்ட கூட்டங்களை நடத்தி அவர்களுடன் கலந்துரையாடி, முக்கியப் பிரமுகர்களையும் நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். எல்லாத் தரப்பு மக்களையும், முக்கியப் பிரமுகர்களையும் வீடு வீடாகச் சென்று சந்தித்து ஆதரவு கோரி கொண்டிருக்கிறேன். செல்வாக்கு மிக்க மக்கள், எல்லா தரப்பு மக்களையும் நான் சந்தித்து ஆதரவு கோரி கொண்டிருக்கிறேன். ஓங்கிச் சொல்லுகிறோம், உரக்கச் சொல்லுகிறோம், அடித்துச் சொல்லுகிறோம் தொண்டாமுத்தூர் திமுக வசம் வரும்.

3. திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்கள் மக்களிடம் எந்த அளவுக்குச் சென்று சேர்ந்துள்ளது? அதன் தாக்கம் எப்படி இருக்கு இந்த தேர்தல் களத்துல? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போன தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எல்லாத் தரப்பு குடும்பங்களிலும் ஏதோ ஒரு நலத் திட்டமாவது அந்தக் குடும்பத்தில் இருக்கிற உறுப்பினரைச் சென்றடைந்திருக்கிறது.

குறிப்பாக, மகளிர் விடியல் பயணம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், தமிழ் புதல்வன், இன்னுயிர் காப்போம் 48 எனத் தலைவர் அறிவித்த அத்தனை திட்டங்களில் ஏதோ ஒரு திட்டமாவது தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் இருக்கிற குடும்பங்களிலும் இருக்கின்ற ஒரு நபருக்காவது எங்களுடைய முதல்வர் அறிவித்த திட்டம் சென்றடைந்திருக்கிறது என்பது எங்களுக்கு களத்தில் கண்கூடாகத் தெரிகிறது. திமுக சார்பில் வாக்கு சேகரிக்கச் செல்லும்போது எங்களைப் பார்த்து புன்முறுவல் பூத்து ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

4. தமிழக அரசியலுக்குப் புதிதாக வந்துள்ள தவெக திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி எனவும் இளைஞர்கள் ஆதரவு தங்களுக்கு உள்ளதாகவும் தொடர்ச்சியாகச் சொல்கிறார்கள். உண்மையில் களம் எப்படி இருக்கு? அவங்க தாக்கத்தை ஏற்படுத்துவாங்களா? அவங்க ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியிலும் ஒவ்வொரு ஏரியாவுக்கும் அவங்களுடைய உறுப்பினர்களைப் பொறுத்து தாக்கம் இருக்கலாம்.

அவர்கள்​ தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் எல்லா தொகுதியிலும் இருக்காது, அந்தத் தாக்கம் பெரிய அளவிலும் இருக்காது. தவெகவுக்கு இளைஞர்கள் ஆதரவு இருக்கலாம்; ஆனால், வாக்களிக்கக்கூடிய இளைஞர்களாக இருக்க வேண்டும். அவர்களை ஆதரிப்பவர்கள் எல்லாம் வாக்கு இல்லாதவர்கள்.

Tags : Nachnu Nalu ,S.P. Velumani ,Thondamuthur ,DMK ,NR Karthikeyan ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Thalapathy ,
× RELATED தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட்...