×

அண்ணாமலை – வானதி ஆதரவாளர்கள் மோதல்; புறக்கணிக்கப்பட்டாரா அண்ணாமலை?.. நயினார் நாகேந்திரன் விளக்கம்

 

சென்னை; அண்ணாமலை ஊரில் இல்லாததால்தான் வரவேற்பாளர் பட்டியலில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார். கடந்த 29ம் தேதி பிரச்சாரத்துக்காக கோவை வழியாக பிரதமர் மோடி கேரளா சென்றார். பிரதமரை வரவேற்க பாஜக தலைவர்கள் கோவையில் குவிந்த நிலையில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. அண்ணாமலை திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தனர். அண்ணாமலை வராதது பற்றிய கேள்விக்கு வரவேற்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இருந்ததாக வானதி விளக்கம் அளித்தார். தான் விமான நிலையத்துக்கு வந்தபோதுகூட அண்ணாமலை பற்றி கேட்டதாகவும் வானதி தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பிரதமரை வரவேற்கும் பாஜக தலைவர்கள் பட்டியலில் அண்ணாமலை பெயரை சேர்க்கவில்லை என ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தனர். வானதி சீனிவாசன் தவறான தகவலை வெளியிடுவதாகவும் அண்ணாமலை ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை ஆதரவாளர்கள், நயினார், வானதி ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. பாஜகவில் அண்ணாமலை அவமானப்படுத்தப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர்.

அண்ணாமலை புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து பாஜக தலைவர் நயினாரிடம் கேள்விக்கு பதிலளித்த அவர்; பிரதமர் வரவேற்பு தொடர்பாக அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் பேசியதாகவும், அண்ணாமலை ஊரில் இல்லாததால்தான் வரவேற்பாளர் பட்டியலில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

Tags : Annamalai ,Nayinar Nagendran ,Modi ,Kerala ,Goa ,BJP ,PM ,
× RELATED அதிமுக சார்பில் சட்டமன்றத்...