×

எவ்வளவுதான் கூவினாலும் எடப்பாடி சரக்கு விற்காது: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திட்டவட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரான கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2021 தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 500 தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளார். அவரது திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திலும் பலன் பெற்றுள்ளனர். இந்த திட்டங்களின் பலனை பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இதற்கு நன்றிக் கடனாக திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் முடிவெடுத்துவிட்டனர் என்றார்.

அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, `யார் நல்லா படிப்பார்கள்; யார் காப்பி அடிப்பார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமி எதை சொன்னாலும் அதை தமிழ்நாட்டு மக்கள் தங்கள் செவிகளில் ஏற்றுக்கொள்வதில்லை. என்னதான் கூவி கூவி விற்றாலும் பழனிசாமியின் சரக்கு விற்காது’ என்றார்.

Tags : Minister ,K. R. Peryakarapan ,Sivaganga ,-operatives ,K. Stalin ,
× RELATED ஏப்.3ம் தேதி அனைத்து தொகுதி திமுக...