×

தே.ஜ. கூட்டணிக்கு தலைமை பாஜகதான்; நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் எடப்பாடிக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பேட்டி

சென்னை: நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் எடப்பாடிக்கு வரும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளை அடிமைக் கட்சிகள் என விமர்சிப்பது தவறு. தேஜ கூட்டணிக்கு தலைமை பாஜக என்பது வெளிப்படையாக தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் தாமரை சின்னத்தில்தான் போட்டியிட விரும்புகின்றன. பீகாரில் நிதிஷ்குமாருக்கு வந்த நிலை எடப்பாடிக்கு வரும். பாஜகவால் மாநில கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைதான் அதிமுகவுக்கு வரும்.

என்னதான் மேக்கப் போட்டு மறைத்தாலும் எடப்பாடியின் ஒவ்வொரு அறிவிப்புக்கு பின்னாலும் அமித் ஷாதான் இருக்கிறார். அதிமுக கூட்டணியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாதான் முடிவெடுக்கிறார். அமித் ஷா தரும் ஸ்கிரிப்டை எடப்பாடி மாற்றாமல் அப்படியே படிக்கிறார். மோடியா லேடியா என்று கேட்டு தேசிய கட்சியான பாஜகவுக்கு சவால் விட்டவர் ஜெயலலிதா; டெல்லி பாஜகவுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் என்று சொல்லிக் கொண்டு மீண்டும் மீண்டும் அடிபணிகிறார் எடப்பாடி. திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது.

மனம் ஒத்த கூட்டணியாக திமுக கூட்டணி அமைந்துள்ளது. திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்ததால் திமுகவும் தொகுதிகளை குறைத்தே நிற்கிறது. சுயமரியாதையுடன் தன்மானத்துடன் இயங்கும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். திமுக கூட்டணியை விமர்சிக்கும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அதிமுக போட்டியிடக் கூடிய தொகுதிகளைக் கூட எடப்பாடி பழனிசாமியால் கூற முடியவில்லை என்று கூறினார்.

Tags : J. ,BJP ,Nitish Kumar ,Minister ,Sivasankar Panparpu ,Chennai ,Sivasankar ,Dimuka ,Deja Alliance ,
× RELATED சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில்...