- நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்
- புது தில்லி
- மேற்கு ஆசியப் போர்
- மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்
- தேசிய…
புதுடெல்லி: மேற்கு ஆசியா போரால், நாடு முழுவதும் வர்த்தக காஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டல்கள், உணவகங்கள் காஸ் செலவுக்கென தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. இது குறித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், சில ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் நுகர்வோருக்கு வழங்கும் பில்களில் ‘எல்பிஜி கட்டணம்’, ‘எரிவாயு கூடுதல் கட்டணம்’ மற்றும் ‘எரிபொருள் செலவு மீட்பு’ போன்ற கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதை சிசிபிஏ தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. இது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும். எந்தவொரு ஓட்டலோ அல்லது உணவகமோ, பில்லில் காஸ் செலவுக்கு கூடுதல் கட்டணங்களை விதிக்கக் கூடாது. இதை மீறுவது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகக் கூடும்.
இவ்வாறு எச்சரித்துள்ளது.
