புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி உடலில் ஏற்பட்ட ஒரு வகை தொற்று காரணமாக கடந்த 24ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உடலில் ஏற்பட்ட தொற்றுநோயைக் குணப்படுத்த ஆன்டிபயாடிக்ஸ் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த சிகிச்சைக்கு அவர் சிறப்பாக ஒத்துழைப்பு தருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
