×

அம்பத்தூர் திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு

அம்பத்தூர்: சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், நேற்று மாலை அம்பத்தூரில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில், திமுக பாக முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பூபேஷ், தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அஜய்குமார், சுற்றுசூழல் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசந்திரன், மாவட்ட செயலாளர் பொன்ராஜ், மாணவர் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் உள்பட 50க்கும் மேற்பட்டோர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், தற்போது திமுக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதற்கு, தற்போது திமுகவில் மாற்று கட்சியினர் இணைந்திருப்பதே எடுத்துக்காட்டு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக மற்றும் அமமுக அலுவலகம், நீலாங்கரையில் அன்புமணியின் அலுவலகங்களை ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் அலுவலகமாக மாற்றிவிடலாம். அடிமைகள் பற்றிய கேள்விகளுக்கு, தன்மானமுள்ள திமுக பதில் சொல்வதற்கு தயாரில்லை என்று தெரிவித்தார்.

Tags : Ambattur ,Dimuka ,Bhagavars ,Minister ,P. K. ,Sekarbapu ,Sekharbhabu ,Dimuka Bhagha ,Tamil ,Pubesh ,
× RELATED எரிபொருள் விலை அதிகரிப்பால் விமான...