×

நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவம்: வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு

நாங்குநேரி: நாங்குநேரி பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தை அடுத்து, இது தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பகிர்வு செய்தவர்கள் மீது விஜயநாராயணம் மற்றும் நாங்குநேரி காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்யும் பணி நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் செய்திக்குறிப்பில்;
நாங்குநேரி காவல் நிலைய சரகம், பெரும்பத்து கிராமத்தில் கடந்த 02.03.2026 அன்று இரவு நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக, நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணையில், மேற்படி கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த குற்ற சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பிரிவினையை தூண்டும் விதமாக, வன்முறையான வார்த்தைகளை பயன்படுத்தி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்யும் நபர்கள் மீது தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மாவட்டத்தில் வன்முறை மற்றும் பிரச்சினையை தூண்டும் வகையில் இதுபோல பிரச்சனைக்குரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பும் மற்றும் பதிவு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. வி.பிரசண்ண குமார், IPS., எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற இது போன்ற கருத்துக்களை விஷமத்தனத்துடன் பதிவு செய்வதை தவிர்த்து, சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Nanguneri double murder incident ,Nanguneri ,double murder ,Visayanarayana ,
× RELATED எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்பிய கொள்ளையன்...