×

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக நடக்கிறது: மேலிட பொறுப்பாளர் பேட்டி

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை இறுதி செய்து, எத்தனை தொகுதிகள் என்பது முடிவான பின்பு அறிவிக்கப்படும். திமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வருவது நல்லது தான். இதனால் கூட்டணி வலுவடையும்.

நான் பெங்களூரு செல்வது மல்லிகார்ஜூன கார்கேவை, பார்ப்பதற்காக அல்ல. அவர் டெல்லியில் இருக்கிறார். நான் சொந்த வேலையாக, பெங்களூரு செல்கிறேன். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியை நான் சந்தித்து பேசியது, மரியாதை நிமித்தமான சந்திப்பு. திமுகவுடன் நாங்கள் பேசும்போது, ராஜ்யசபா சீட் குறித்தும் பேசுகிறோம். அதோடு சட்டமன்றத்தில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்தும், பேசுகிறோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : DMK ,Congress alliance ,Tamil Nadu Congress ,Girish Chodankar ,Chennai airport ,
× RELATED சென்னையில் சிலிண்டர்கள் வெடித்து ஒருவர் பலி: 7 பேர் படுகாயம்