- மெட்ரோ ரெயில்
- T20 கிரிக்கெட் போட்டியில்
- சென்னை
- மெட்ரோ
- T20 சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெ
- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
- சென்னை செப்பாகம் எம். ஏ.
- சிதம்பரம் மைதானம்
சென்னை: டி-20 சர்வதேச உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இன்று மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (26ம் தேதி) நடைபெறும் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் இந்தியா – ஜிம்பாவே அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை பார்வையிட வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்துள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ பயணங்களை ஸ்பான்சர் செய்கிறது. அதன்படி கிரிக்கெட் போட்டிக்கான நுழைவு சீட்டை பயன்படுத்தி, போட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான சுற்று பயணத்தினை இலவசமாக மேற்கொள்ளலாம். டிஜிட்டல் நுழைவு பயண சீட்டுகளில் உள்ள தனித்துவமான க்யூஆர் குறியீடுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவு சீட்டை வைத்திருப்பவர்கள் ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 12 மணிக்கும், வழித்தடம் 1-ல் (நீலவழித்தடம்) விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லும் கடைசி ரயில் நள்ளிரவு 12 மணிக்கும், சிறப்பு மெட்ரோ ரயில் சேவை நடைபெறும் காலத்தில் (அதாவது இரவு 11 மணிக்குப் பின்பு), வழித்தடம் 2-ல் (பச்சை வழித்தடம்) உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே மாறி செல்ல இயலும்.
பயணிகள் கடைசி ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தானியங்கி நுழைவாயில்களில் உங்களது க்யூஆர் குறியீட்டை காண்பிக்கும் போது, நுழைவதிலும், வெளியேறுவதிலும் தாமதமோ அல்லது சிரமமோ ஏற்படாமல் இருக்க, க்யூஆர் குறியீட்டை தயாராக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்று, தடையில்லா பயணத்தை அனுபவிக்கும்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
