சென்னை: தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்கும் வகையில் எதிரணியினர் செயல்பட்டு வருகிறார்கள். எதிர்க்கட்சியினரின் பொய்ச் செய்தி, அவதூறுகளை முறியடிக்க வேண்டும் என சென்னை நந்தனத்தில் நடக்கும் திமுக ஐ.டி. விங் நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘பொய் செய்தியை படிப்போர் பாதி பேர் நம்முடைய விளக்கத்தை படித்தாலே அது நமக்கு வெற்றிதான். பொய் செய்திகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டும்’ எனவும் உரையாற்றினார்.
