×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு!

 

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (டிச.21) மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். SIRக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சர்பார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Chief Minister ,Mu. K. ,Dimuka District Secretaries ,Stalin ,Chennai ,K. DURAIMURUGAN ,SECRETARY GENERAL OF AKKADZI ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...