திருச்சி, டிச.19: திருச்சியில் 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.
திருச்சி செம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்த னிவாசன் மகன் கவுதம்(18), டிப்ளமோ படித்து வந்தார். இவர் உறவினர் நல்லசாமியின் வெல்டிங் பட்டறையில் கடந்த 3 மாதமாக வேலை பார்த்து வந்தார். ஏர்போர்ட் மொராய்ஸ் சிட்டி நுழைவுவாயில் பகுதியில் கடந்த 16ம் தேதி நடந்த கட்டுமான பணியில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக 30 அடி உயரத்தில் இருந்து கவுதம் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி இறந்தார். இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
