×

ரயில் டிக்கெட் முன்பதிவு நிலையை பயணிகள் அறிந்து கொள்ளலாம்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு

டெல்லி: ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு நிலையை பயணிகள் அறிந்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு நிலை வெளியிடப்பட்டு வந்த நிலையில் 10 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது. காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டது. இதர ரயில்களுக்கு, அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும். கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ரத்தாவதால் பயணத்தை மாற்றி அமைக்க வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

Tags : Indian Railways ,Delhi ,
× RELATED தெருநாய்க்கடி விவகாரம் தொடர்பாக...