சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இருந்து இதுவரை பாலியல் புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் வரவில்லை என கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீஸ், கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இதனையடுத்து கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இருந்து இதுவரை பாலியல் புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் வரவில்லை: கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் பேட்டி
