மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12ல், காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டில் பெய்த பருவமழை காரணமாக, மேட்டூர் அணை நிரம்பி உபரி நீராக 79.50 டி.எம்.சி. தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி முதல் நேற்று வரை 129 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு நீர்ப்பாசன ஆண்டில், மேட்டூர் அணைக்கு கர்நாடகாவிலிருந்து 167.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.