×

இயக்குனர்கள் ஏமாற்றினார்கள்: யாஷிகா ஆனந்த் கசப்பான அனுபவம்

சென்னை: பழைய காதல் முறிந்த நிலையில் இப்போது யாரையும் காதலிக்கவில்லை என நடிகை யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார். பார்ட்டிக்கு இப்போதும் செல்கிறீர்களா என்ற கேள்விக்கு, கடந்த 5 வருஷமா நான் எந்த பார்ட்டிக்கும் போகுறது இல்ல, ஆனா வழக்கம் போல எங்க வீட்லயே பார்ட்டி நடக்கும், வீட்லயே பார் செட்டப் இருக்கு, லைட் மியூசிக் இருக்கு, ஆல்கஹாலும் இருக்கும். ஆனா நான் குடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் நண்பர்கள் குறித்து பேசிய யாஷிகா, நண்பர்களுக்காக நாம எதுவும் செய்யக்கூடாதுங்கிறதை அனுபவபூர்வமா கத்துக்கிட்டேன். அதுவும் இந்த சினிமா நிறைய விஷயத்தை எனக்கு கத்து கொடுத்துவிட்டது. எனக்கு சில இயக்குநர்கள் நண்பர்களாக இருந்தாங்க. அவங்க என்கிட்ட வந்து கதை சொல்லும்போது வேறமாதிரி இருப்பாங்க.

எனக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்குற மாதிரி கதையை சொல்வாங்க, நானும் அட்வான்ஸ் வாங்கிட்டு செட்டுக்கு போய் பார்த்தாதான் தெரியும், அவங்க சொன்ன கதைக்கும் நான் நடிக்கிற கேரக்டருக்கும் சம்பந்தமே இருக்காது. கமிட்டாகிட்டோமே, வேற வழியில்லையேன்னு அந்த படங்கள்ல நடிக்க வேண்டியதாயிரும். அதனால் நண்பர்களுக்காக நீங்க உங்க கேரியர்ல எதுவும் விட்டுக்கொடுக்காதீங்க என்று கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

Tags : Yashika Anand ,Chennai ,YASHIKA ,NAMA ,
× RELATED இமான் இசையில் நடிக்கும் கனவு நிறைவேறியது: முகேன் ராவ்