ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். சமீபகாலமாக அவர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். இதையடுத்து இந்தோனேஷியா சென்ற அவர் அங்குள்ள பழங்கால கோயிலுக்கு சென்று குளத்தில் குளித்திருக்கிறார். பிறகு சிறப்பு பூஜை செய்திருக்கிறார். எதற்காக இந்த பூஜையை செய்தீர்கள் என நெட்டிசன்கள் அவரை கேள்வி கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்லாமல், நான் இப்போது ஆன்மிக மோடில் இருக்கிறேன் என்று மட்டும் ஐஸ்வர்யா மேனன் கூறியிருக்கிறார்.

