×

குழந்தை பெத்துக்க மாட்டேன்

எனக்கு திருமணமும் ஆகவில்லை, குழந்தையும் இல்லை. ஒரு தரப்பினர் குழந்தையைப் பெற்று மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள் என்கிறார் பார்வதி திருவோத்து. குழந்தையென்றால் எனக்கு கொள்ளை ஆசை எனச் சொல்லும் ஹீரோயின்களைத்தான் பார்த்து இருக்கிறோம். இவர்களிலிருந்து வேறுபடுகிறார் பார்வதி. அவர் மேலும் கூறும்போது, ‘‘பெண்களும் உடலளவில் பெரிய அளவில் மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.

ஒரு குழந்தையை பெற்றெடுப்பது பெரிய விஷயம், அதைவிட பெரிய விஷயம் அதை சரியாக வளர்ப்பது. அந்தப் பொறுப்பை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை, அதனால்தான் அம்மாவாகாமல் இருப்பது தான் என்னுடைய நோக்கம்’’ என்கிறார். குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பார்வதி கூறிய கருத்திற்கு கலவையான விமர்சனங்கள் ரசிகர்கள் தரப்பிலிருந்து வருகின்றன.

 

Tags : Parvathy Thiruvothu ,Parvathy ,
× RELATED காதலன் பெயரை அறிவித்த ஜான்வி