×

நீருக்கடியில் சண்டை காட்சியில் நடித்த ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ராஷ்மிகா மந்தனா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் ‘ரணபாலி’ என்ற வரலாற்று படத்திலும், ‘மைசா’ என்ற பழங்குடி மக்கள் பற்றிய படத்திலும் நடித்து வருகிறார். இதில் ‘ரணபாலி’ படம் வரும் செப்டம்பர் 11ம் தேதியும் ‘மைசா’ வரும் அக்டோபர் மாத்திலும் வெளியாகிறது. 2 படங்களிலும் மாறி மாறி தேதிகள் ஒதுக்கி ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘மைசா’ படத்திற்காக நீருக்கடியில் ஒரு முக்கிய சண்டை காட்சி சமீபத்தில் படமாக்கபட்டது. அதில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் முதல்முறையாக ஆழமான நீருக்கடியில் சண்டை காட்சியில் நடித்த நடிகை என்ற பெருமையை ராஷ்மிகா மந்தனா பெற்றுள்ளார். இதனை ‘மைசா’ படத்தின் இயக்குனர் ரவீந்திர புல்லே அவரது சோஷியல் மீடியாவில் போட்டோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒரு போர் ஆழத்தில் அரங்கேறுகிறது. அதை காண தயாராகுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இயக்குனரின் இந்த பதிவால் ‘மைசா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags : Rashmika Mandanna ,Vijay Deverakonda ,
× RELATED ஆண்ட்ரியா மகனாக சிம்பு