அலிபாக்கில் பீச் ஹவுஸ் ரூ.24 கோடிக்கு நிலம் வாங்கிய யஷ்

மும்பை: நடிகர் யஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா பண்டிட் தம்பதியினர் மகாராஷ்டிராவின் அலிபாக் பகுதியில், கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு நிலத்தை ரூ.24 கோடிக்கு வாங்கியுள்ளனர். தங்கள் விடுமுறைக்கால வீடு கட்டும் நோக்கில் இந்த நிலத்தை அவர்கள் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1.75 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த நிலம் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.1.44 கோடி முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தப்பட்டது. யஷ் மற்றும் ராதிகா பண்டிட் ஆகியோர் கோட் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அவினாஷ் போர்க்கரிடமிருந்து இந்தச் சொத்தை வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டாக்ஸிக் திரைப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் ராமயாணா படத்தில் ராவணனாக யஷ் நடித்துள்ளார். அதன் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ள நிலையில், பாலிவுட் சினிமாவை குறிவைத்து இப்படி அலிபாக் பக்கம் நகர்கிறாரா யஷ் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பெரும் பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அலிபாக் தற்போது சொகுசு விடுமுறை இல்லங்கள் மற்றும் இரண்டாம் வீடுகளுக்கான விருப்பமான இடமாக உருவெடுத்துள்ளது. கோவிட்19 தொற்றுநோய்க்குப் பிறகு இத்தகைய முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. யஷ்ராதிகா தம்பதியைத் தவிர, பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன்ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மாவிராட் கோலி, தொழிலதிபர் கௌதம் சிங்கானியா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா மற்றும் அடார் பூனாவல்லா உள்ளிட்ட பலரும் அலிபாகில் முதலீடு செய்துள்ளனர். செப்டம்பர் 2022ல், தீபிகா படுகோன்ரன்வீர் சிங் தம்பதியினர் 2.25 ஏக்கர் நிலத்தை ரூ.22 கோடிக்கு வாங்கினர்.

Related Stories: