×

மும்பை நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது நடிகை ஜன்னத் சுபைர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

பான்வெல்: பிரபல டி.வி நடிகை ஜன்னத் சுபைர், அவரது தம்பி அயான் சுபைர் ஆகியோர், கடந்த 15ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பான்வெல் பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் காரில் பயணித்தனர். அப்போது சில மர்ம நபர்கள், திடீரென்று அவர்களின் காரை வழிமறித்தனர். பிறகு அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அந்த நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து ஜன்னத் சுபைரின் நிர்வாக குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர்களின் அடையாளம் மற்றும் அவர்களின் நோக்கம் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஜன்னத் சுபைர் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் சென்றபோது, ஜன்னத் சுபைர் மற்றும் அயான் சுபைர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அவர்களது கார் துரத்தப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவமும் நடந்தது. ஜன்னத் சுபைர், அயான் சுபைர் இருவரும் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Jannat Zubair ,Mumbai ,Panvel ,Ayan Zubair ,Panvel, Maharashtra ,
× RELATED ஆண்களுக்கு பூனம் பஜ்வா எச்சரிக்கை