சென்னை: எழில் அரசன் இயக்கும் ‘கல்யாணி’ படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. படத்தைப் பற்றி இயக்குனர் எழில் அரசன் கூறும்போது, ‘‘90, 95 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு பெயர் கல்யாணி இதை அனைவராலும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. இந்த படம் காதல், நட்பு, உறவு என கொண்டாட்டத்தில் தொடங்கி கொண்டாட்டத்தில் முடியும்’’ என்றார். எழில் அரசனின் சகோதரர் என்.முகில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் படத்தின் நாயகன், நாயகி மற்றும் இதர நடிகைகள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும். படத்தின் ஒளிப்பதிவு பணிகளை லெனின் சந்திரசேகரன் மேற்கொள்கிறார். படத்தின் தயாரிப்பு பணிகளை பி.சரவணவேல் கவனிக்கிறார். ஈஸ்வரி புரொடக்ஷன் சார்பில் எம்.ஆர். ஈஸ்வரி படத்தை தயாரிக்கிறார். படத் துவக்க விழாவிற்கு ஸ்டண்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம் தலைமை வகித்தார். மேலும் கேபிள் சங்கர், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
