சென்னை: கடந்த சில மாதங்களாக தனுஷ், மிருணாள் தாக்கூர் தீவிரமாக காதலிப்பதாகவும், நாளை காதலர் தினத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இதை உறுதி செய்யும் வகையில், சில நிகழ்ச்சிகளில் அவர்கள் ஒன்றிணைந்து காணப்பட்டனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மிருணாள் தாக்கூர், ‘தனுஷ் எனக்கு நல்ல நண்பர். அவர் எனக்கு ஒரு சகோதரர் போன்றவர். எங்களுக்கு இடையே இருப்பது தொழில்ரீதியான நட்பு மட்டுமே’ என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மிருணாள் தாக்கூர், ‘என்னது… தனுஷை நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேனா? இல்லவே இல்லை. இந்த வதந்தியை பரப்பியவர்களுக்கு வரும் 14ம் தேதி, ஏப்ரல் 1ம் தேதி போல் உலக ஏமாளிகள் தினமாக இருக்கப் போகிறது. எனக்கு திருமணம் என்ற பேச்சை யார் தொடங்கியது என்று தெரியவில்லை. இந்த திருமணத்தை நான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிட்டதாக சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். இதை நினைத்து அதிக பயம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.
