- கே
- பக்யராஜ்
- பிரேம் மற்றும் புகழ்
- தமிழ் திரைப்பட விருது விழா
- சென்னை
- திரைப்பட விருது விழா
- காமராஜர் அரங்கம்
- சித்ரா லட்சுமணன்
- கே. பாக்யராஜ்
- ஆர். வி. உதயகுமார்
- ஆர் செல்வாமணி
- டி. சிவா
சென்னை: தமிழ் திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை சிறப்பிக்கும் வகையில், ‘ஃபிரேம் அன்ட் ஃபேம்’ என்ற திரைப்பட விருது விழா, வரும் ஜனவரி 25ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடக்கிறது. இவ்விழாவை தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் நடத்துகிறார். இதுகுறித்த அறிவிப்பு நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, டி.சிவா கலந்துகொண்டனர்.
அப்போது சித்ரா லட்சுமணன் பேசியதாவது: திரைக்கலைஞர்களின் பேட்டி மற்றும் கருத்துகளை வெளியிடுவதை தாண்டி, அவர்களை சிறப்பித்து கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விருது விழாவை நடத்துகிறேன். நடுவர் குழு தலைவராக கே.பாக்யராஜ் இருப்பார். நடுவர்களாக இளவரசு, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குஷ்பு ஆகியோர் இருப்பார்கள். சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்பட 50 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். வெப்தொடர்களுக்கு கிடையாது. திரையுலக சாதனையாளர்களின் பெயர்களிலும் சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.
