அதனடிப்படையில், மணியன் மீது, வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக்கோரி ஆர்.பி.வி.எஸ்.மணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு ஆர்.பி.வி.எஸ்.மணியன் நேற்று நேரில் ஆஜராகியிருந்தார்.
அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது, உங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா என்று மணியனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மணியன் தன்மீதான குற்றச்சாட்டுகளை ஏற்க மறுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி, சாட்சி விசாரணைக்காக வழக்கு ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேச்சு விஎச்பி முன்னாள் நிர்வாகி மணியன் மீது குற்றச்சாட்டு பதிவு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
