குடியாத்தம், ஜூலை 21: குடியாத்தம் அருகே திருமண ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முரளி(24), கூலி தொழிலாளி என்பவர், நேற்று சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி சென்றுள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் கடத்திச் சென்ற முரளியின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். விசாரணையில், சிறுமியிடம் இளைஞர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை மீட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்து, வாலிபர் முரளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post திருமண ஆசைவார்த்தை கூறி வாலிபர் கடத்திய சிறுமியை உடனடியாக மீட்ட போலீசார் appeared first on Dinakaran.
