பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்தது. மேலும் டி.ஆர்.எப் அமைப்பு தான் இதற்கு காரணம் என்று குறிப்பிடப்படுவதைத் தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக பாகிஸ்தான் தலையிட்டது.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் டிஆர்எப் பற்றி குறிப்பிடப்பட்டதை நாங்கள் எதிர்த்தோம். இதற்காக உலக நாடுகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் பாகிஸ்தான் அதை ஏற்காது என்றேன். அதன்பின் டிஆர்எப் பெயர் நீக்கப்பட்டது, பாகிஸ்தான் வெற்றி பெற்றது. டிஆர்எப் சட்டவிரோதமானது என்று நாங்கள் கருதவில்லை. பஹல்காம் தாக்குதலை அவர்கள் நடத்தியதற்கான ஆதாரத்தை எங்களுக்குக் காட்டுங்கள்.
டிஆர்எப் அதில் ஈடுபட்டதற்கான ஒரு ஆதாரத்தை காட்டுங்கள். ஆதாரம் எதையும் காட்டாமல் இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்க மாட்டோம். எனவே தான் ஐநா செய்திக்குறிப்பில் இருந்து டிஆர்எப் பெயர் நீக்கப்பட வேண்டியிருந்தது. அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் வரும் டிஆர்எப் மீதான குற்றச்சாட்டையும் நாஙக்ள் நிராகரிக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) என்று அழைக்கப்படும் டிஆர்எப் அமைப்பை ஜூலை 18 ஆம் தேதி, அமெரிக்கா ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுவான டி.ஆர்.எப். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் உதவி அமைப்பாக உள்ளது.
The post அமெரிக்கா தடை எதிரொலி; பஹல்காம் தாக்குதலை டிஆர்எப் நடத்தியதற்கான ஆதாரம் எங்கே..? பாக். நாடாளுமன்றத்தில் துணைப்பிரதமர் ஆவேசம் appeared first on Dinakaran.
