வேலூர், ஜூலை 20: காட்பாடியில் அடுத்தடுத்து 2 வீடுகள் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். காட்பாடி அடுத்த தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவக்குமார்(53), முடி திருத்தும் தொழிலாளி. இவரது சகோதரர் சுதாகர்(45), லாரி டிரைவர். இருவரும் அருகருகே வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இருவரின் வீட்டின் வெளியே வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார், சுதாகர் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், 2 வீட்டின் மீதும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து சிவக்குமார் பிரம்மபுரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் மர்ம நபர்கள் 2 வீடுகளின் மீதும் மண்ெணண்ணெய் குண்டுகளை வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்திவு செய்து மண்ெணண்ணெய் குண்டுகளை வீசிவிட்டு சென்றது யார்?, முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post 2 வீடுகள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு மர்ம நபர்களுக்கு வலை காட்பாடியில் அடுத்தடுத்து appeared first on Dinakaran.
