×

சிறுமி, இளம்பெண்ணை கடத்தியதாக 2 வாலிபர்கள் மீது புகார்: போலீசார் விசாரணை

வேலூர், ஜூலை 18: வேலூரில் சிறுமி, இளம்பெண்ணை கடத்தியதாக 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூரை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் நர்சிங் படித்துள்ளார். இவர் கடந்த 15ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர். அதில் எங்களது மகளை மேல்விஷாரத்தை சேர்ந்த 21 வயது வாலிபர் கடத்திச்சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அதேபோல், பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14ம்தேதி பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் பாகாயம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். அதில் தங்களது மகளை வேலூர் அடுக்கம்பாறையை சேர்ந்த 27 வயது வாலிபர் கடத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியையும், கடத்தியதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.

The post சிறுமி, இளம்பெண்ணை கடத்தியதாக 2 வாலிபர்கள் மீது புகார்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dinakaran ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...