×

வாங்கல் அருகே சிறுநீரக கல் பிரச்னையால் அவதிப்பட்டவர் தற்கொலை

கரூர், ஜூலை. 18: கருர் மாவட்டம் வாங்கல் அருகே சிறுநீரக கல் பிரச்னையால் அவதிப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கருர் மாவட்டம் வாங்கல் அடுத்த என்புதூரைச் சேர்ந்தவர் சண்முகம் (56). இவர், கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக கல் பிரச்னை காரணமாக ஏற்பட்ட வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த சண்முகம், கடந்த 15ம்தேதி, வாங்கல் அடுத்த செவந்திபாளையம் காவிரி ஆற்றுக்கரையோரம் விஷம் குடித்து மயங்கினார். ஆபத்தான நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post வாங்கல் அருகே சிறுநீரக கல் பிரச்னையால் அவதிப்பட்டவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vangal ,Karur ,Karur district ,Shanmugam ,Enbudur ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...