பவானி, ஜூலை 18: சித்தோடு அருகே நீரேற்று நிலையத்தில் பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவர், கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்தோடு அருகே காவிரி நீரேற்று நிலையத்தில் ஆகாயத்தாமரை செடிகளுக்குள் அழுகிய நிலையில் பெண் உடல் கிடப்பதை அப்பகுதியில் நேற்று மாலை பார்த்துள்ளனர். இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண்ணுக்கு 30ல் இருந்து 40 வயதுக்குள் இருக்கலாம். அவர், ஆற்றில் அடித்து வந்ததில் உயிரிழந்தாரா, காவிரி வெள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post சித்தோடு அருகே நீரேற்று நிலையத்தில் பெண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.
