ஈரோடு, ஜூலை 18: நம்பியூர் அடுத்த பழைய சூரிபாளையத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர், அதேப்பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (26). இவர்களுக்கு துர்கா ஸ்ரீ (3) என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் மூலம் யாரிடமோ சத்யா பேசி வந்ததாக தெரிகிறது. இதனை ரவி கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி, ரவியுடன் வேலை செய்யும் பூபதி என்பவருக்கு போன் செய்த சத்யா, தன்னை கணவர் ரவி துன்புறுத்துவதாகவும், தன் மகளுடன் வீட்டை விட்டு செல்வதாகவும், தேட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.
இதனையறிந்த ரவி, உடனடியாக சத்யா தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவி உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். ஆனாலும், மாயமான சத்யா மற்றும் துர்கா ஸ்ரீ கிடைக்கவில்லை. இதுகுறித்து ரவி அளித்த புகாரின்பேரில், நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சத்யா, சிறுமி துர்கா ஸ்ரீயை தேடி வருகின்றனர்.
The post இன்ஸ்டாகிராமில் தகாத தொடர்பு கணவர் கண்டித்ததால் மனைவி, மகள் மாயம் appeared first on Dinakaran.
