இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், செம்மணி அருகில் உள்ள நல்லூரில் மேம்பாட்டு பணிகளுக்காக குழி தோண்டப்பட்டது. அப்போது மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதை யாழ்ப்பாண நீதிமன்ற உத்தரவின்படி அந்த பகுதியில் அகழாய்வு பணி நடந்தது. கடந்த 10ம் தேதி அகழாய்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதில் 65 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 2 எலும்பு கூடுகள் 4 மற்றும் 5 வயதுடைய 2 சிறுமிகளின் எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணரான ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார். இங்கு மேலும் பல மனித எலும்பு கூடுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
The post இலங்கை செம்மணியில் மேலும் 65 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.
