12 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

நாமகிரிப்பேட்டை, ஜூலை 17: நாமகிரிப்பேட்டை அருகே பிலிப்பாகுட்டை பகுதியில் செயல்படும் டீக்கடை, பெட்டிக்கடை, மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் உத்தரவின் பேரில், நாமகிரிப்பேட்டை வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராஜா, ராசிபுரம் உணவு பாதுகாப்புதுறை அலுவலர் கோகுல், புதுசத்திரம் வட்டார அலுவலர் ரமேஷ், மோகனூர் வட்டார அலுவலர் மணிமாறன் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர். இதில் அப்பகுதியில் உள்ள கடைகளில், விற்பனைக்கு வைத்திருந்த ரூ.10ஆயிரம் மதிப்பிலான 12கிலோ குட்காவை பறிமுதல் செய்து, கடைகளுக்கு சீல் வைத்தனர்.

The post 12 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: