சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ. 45 குறைந்து ரூ.9,100க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.124க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைந்தது. அந்த வகையில், கடந்த மாதம் 14ம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் தங்கம் விலை பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. வாரம் இறுதி நாளான கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,120க்கு விற்பனையானது. அது மட்டுமல்லாமல் அந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 வரை உயர்ந்தது.

இந்நிலையில் வார தொடக்கத்தின் இரண்டாம் நாளான நேற்று தங்கம் விலை சற்று குறைந்து விற்பனையானது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,145க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.73,160க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.125க்கும் விற்பனையானது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: