×

ஜூலை 18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சி,ஜூலை 16: ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ஜூலை 18 ம் தேதி காலை கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஜூலை 2025-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 18ம் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நோிலோ, மனுக்கள் மூலமாகவோ தொிவிக்கலாம். மேலும் விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தகவலை மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

The post ஜூலை 18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers' Grievance Redressal ,Trichy ,Farmers' Grievance Redressal Day ,Grievance Redressal ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்