திருச்சி ஜூலை 16:திருச்சியில் வழிப்பறியில் ஈடுப ட்ட ரவுடியை பிடித்து போ லீசார் விசாரிக்கின்றனர். திருச்சி, தென்னூர், பிஷப் குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாமுண்டி (56). இவர் கடந்த 13ம் தேதி குப்பன்குளம் பகுதியில் உள்ள லேத்து பட்டறை அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார். இவர் தர மறுக்கவே அந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 500 பணத்தை இவரிடமிருந்து பறித்துக் கொண்டு தப்பிசென்றார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து தென்னூர், வாமடம், சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான வீரப்பன் (எ) ராஜ்குமார் (24) என்ற வாலிபரை பிடித்து விசாரிக்கின்றனர். அவரிடமிருந்து பணம் மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
The post கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு appeared first on Dinakaran.
