- கரூர் மாநகராட்சி
- செந்தில் பாலாஜி
- ஸ்டாலின்
- கரூர்
- உங்கலிடன்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கரூர் மாவட்டக் கழகம்
- தின மலர்
கரூர், ஜூலை 16: கரூர் மாநகராட்சியில் ரூ. 800 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக உங்களிடன் திட்ட முகாமில் செந்தில் பாலாஜி கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கிவைத்ததை தொடர்ந்து கரூர் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சி வாங்க பாளையத்தில் கரூர் மாநகராட்சி ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் கே.எம். சுதா, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கரூர் மாவட்ட கழக செயலாளர் வி செந்தில் பாலாஜி எம்எல்ஏ பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே அரசு அலுவலர்கள் வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 10,000 முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் மக்களின் தேவைகளை அறிந்து, அதனை பூர்த்திசெய்யும் வகையில் கோரிக்கைகளை நிறைவேற்றும் மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமானது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 179 இடங்களில் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 101 முகாம்களும், நகர்புற பகுதிகளில் 78 முகாம்களும் நடத்தப்படுகிறது. இந்த முகாம்கள் மூலம் நகர்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளது.இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின். தங்கள் பகுதிகளில் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், இத்திட்டத்தில் 519 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று முகாம்கள் நடைபெறும் இடங்கள், துறைகள். உத்தரவுகள் மற்றும் வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் அட ங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. உங்க
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் நகர்புற பகுதிகளில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாங்கப்பாளையத்தில் வார்டு எண் 4, 5 மற்றும் புகழூர் நகராட்சிக்குட்பட்ட காந்தியார் மண்டபத்தில் வார்டு எண் 1.2 மற்றும் ஊரகப் பகுதிகளான கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தவிட்டுப் பாளையம் பெரியார் மண்டபத்திலும் மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட PJK மண்டபம், ஆண்டிப்பட்டிக்கோட்டை மற்றும் ஆலமரத்துப்பட்டி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது. மற்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கும் தீர்வு காணலாம். இன்று முகாமிற்கு வர இயலாதவர்கள் அடுத்த முகாமில் கலந்து கொள்ளலாம். வழங்கும் பொதுமக்கள் ஆவணங்களோடு இணைத்து வழங்க வேண்டும்.மேலும் கரூர் மாவட்டத்தில் பட்டா இன்றி வசித்து வரும் பொதுமக்களுக்காக 28,000 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் 13,000த்திற்கும் மேற்பட்ட பட்டாக்களை கரூர் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கி உள்ளார். கரூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 328 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி. சாக்கடை வசதி உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டது. மேலும் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஒப்புதல்களும் வரப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே வேளாண்மைக் கல்லூரி, அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தரகம்பட்டியில் அரசு கலைக் கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் குளித்தலை அரசு மருத்துவமனைக்காக ரூ. 40.00 கோடி மத
இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத் துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு தலா ரூ. 72,000 மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளும், இன்றைய முகாமில் மனு அளித்து உடனடியாக வருவாய்த் துறையின் சார்பில் 1 நபருக்கு பிறப்பிடச் சான்றிதழும், 2 நபர்களுக்கு வகுப்புச் சான்றிதழ்களும், 1 நபருக்கு பட்டா மாறுதல் ஆணையினையும், தாட்கோ மூலம் முதலமைச்சரின் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ. 1.05 இலட்சம் மதிப்பீட்டில் மானியங்களும். மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பாக 1 பயனாளிக்கு ரூ. 8,440 மதிப்பீட்டில் சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து காய்கறி தொகுப்பினையும் மற்றும் மாநகராட்சியின் சார்பாக 5 நபர்களுக்கு சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும் 61607 மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ. 7.16 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது.
கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், தலைவர்கள் எஸ்பி கனகராஜ் வெங்கமேடு சக்திவேல், கா. அன்பரசன், ஆர் எஸ் ராஜா, பகுதி கழகப் பொறுப்பாளர்கள் வக்கீல் சுப்பிரமணியன், ஜோதி பாசு, வி. ஜி. எஸ். குமார், கரூர் வடக்கு நகர பொறுப்பாளர் வெங்கமேடு பாண்டியன், மாவட்ட மேலாளர் தாட்கோ முருகவேல், மாநகர பொருளாளர் அங்கு பசுபதி, காந்திகிராமம் வடிவேல், டிஜிட்டல் சம்பத்குமார், வார்டு செயலா ளர்கள், தொடர்புடையஅரசு அலுவலர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொ ண்டனர். மனு வழங்கும் நிகழ்ச்சியில் சுமார் 3,000 அதி கமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
The post கரூர் மாநகராட்சியில் ரூ.800 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒப்புதல்; உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் செந்தில்பாலாஜி பேச்சு appeared first on Dinakaran.
