திருவனந்தபுரம்: ஒன்றிய இணையமைச்சரான சுரேஷ் கோபியும் புலிப்பல்லுடன் கூடிய செயின் அணிந்திருப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி திருச்சூரை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான முகம்மது ஹாஷிம் என்பவர் கேரள டிஜிபியிடம் ஒரு புகார் கொடுத்தார். இதையடுத்து சுரேஷ் கோபி மீதான புகார் தொடர்பாக தற்போது கேரள வனத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக வரும் 21ம் தேதி திருச்சூர் பட்டிக்காடு வனச்சரக அதிகாரி முன் ஆஜராகுமாறு முகம்மது ஹாஷிமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
The post அமைச்சர் சுரேஷ் கோபிக்கு புலி பல் செயினால் சிக்கல் appeared first on Dinakaran.