அமெரிக்க அரசு ஊழியர்கள் 1,300 பேர் பணி நீக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க அரசு ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் 2ம் முறையாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க வௌியுறவுத்துறையில் உள்ள 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமெரிக்காவில் உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வௌிநாட்டு பணிகளை மேற்கொண்டு வந்த 246 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். நிர்வாக மறுசீரமைப்பின் ஒருபகுதியாக இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்க அரசு ஊழியர்கள் 1,300 பேர் பணி நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: