சத்தியமங்கலம்,ஜூலை11: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் புஞ்சை புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் நால்ரோடு பகுதியில் ஹாயாக நடமாடின.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தினர். சிறிது நேரம் நடமாடிய காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் இரு காட்டு யானைகள், ஆலாம்பாளையம் கிராமத்திற்குள் நுழைந்து விவசாய தங்கராஜ் என்பவர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாழைளை சேதப்படுத்தின. யானைகளை அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து விரட்டி அடித்தனர்.
The post பவானிசாகர் அருகே சாலையில் நடமாடிய காட்டு யானைகள் appeared first on Dinakaran.
