இந்நிலையில், அவர் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டு வாடகை செலுத்தாததால், வீட்டை காலி செய்யுமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த சூழலில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அக்கம்பக்கத்து வீட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் போலீசார் நடிகை அஸ்கரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஹுமைரா அஸ்கரின் உடல், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அவர் இறந்து சுமார் 20 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் யாரும் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான தடயங்கள் இல்லாததால், இது கொலையாக இருக்க வாய்ப்பில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இருந்தாலும் ஹுமைரா அஸ்கரின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
The post பாக். நடிகை சடலம் அழுகிய நிலையில் மீட்பு appeared first on Dinakaran.
