அமெரிக்காவில் வெள்ளம் பலி எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு

கெர்வில்: அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதனால் மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின.மலைப்பகுதியில் உள்ள கெர்கவுன்டியில் பெய்த தொடர் கனமழையால் குவாடலூப் ஆற்றின் நீரின் அளவு 45 நிமிடங்களில் 26 அடி உயர்ந்தது. ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் நீரில் மூழ்கின. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் வீட்டின் மேற்கூரையில் தஞ்சமடைந்தனர். பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

குவாடலுாப் ஆற்றங்கரையில் மிஸ்டிக் என்ற சிறுமியருக்கான கிறிஸ்தவ கோடைகால முகாமுக்குள் வெள்ள நீர் பாய்ந்தது. இங்கு தங்கியிருந்த 700க்கும் மேற்பட்டோரில் பெரும்பாலானவர்கள் மீட்கப்பட்டனர். முகாமில் தங்கியிருந்த 27 சிறுமியரை காணாமல்போயுள்ள நிலையில் அவர்களின் பெற்றோர் பரிதவித்துள்ளனர். இந்த நிலையில், வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

The post அமெரிக்காவில் வெள்ளம் பலி எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: