இந்நிகழ்ச்சியில் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ கலந்துக்கொண்டு திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் பயனாளிகளுக்கு தக்காளி கத்திரி வெண்டை மிளகாய் கொத்தவரை கீரை விதைகள் அடங்கிய காய்கறி தொகுப்பு பப்பாளி கொய்யா எலுமிச்சை உள்ளிட்ட பழச்செடிகள் பயறு வகைகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் அட்டை கொண்டு வேளாண்மை உதவி இயக்குநர் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ஆகியோரை அனுகி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் திருத்தணி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜய்குமார் பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய பொறுப்பாளர் பி.டி.சந்திரன் திமுக நிர்வாகி கமல்நாதன் மணி வேளாண்மை உதவி அலுவலர் சீனிவாசன் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் மோகன்ராஜ் உட்பட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post திருத்தணியில் ஊட்டச்சத்து வேளாண்மை தொடக்க விழா விவசாயிகளுக்கு விதை தொகுப்புகள் மரக்கன்றுகள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.
